Sunday, September 14, 2025
28.9 C
Colombo
வடக்குவவுனியால் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியால் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா – வீரபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போன நிலையிலே இன்று மாலை குறித்த நபர் விவசாய செய்கையினை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரியில் நீரில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் (78) என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரிபார்வையிட்டிருந்ததோடு இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles