Zee தமிழ் சரிகமப போட்டியின் வெற்றியாளரான கில்மிஷா உதயசீலனை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் அரியாலை ஸ்ரீகலைமகள் மக்களால் நடத்தப்பட்டது.
இவ் வரவேற்பு நிகழ்வுகளில் கில்மிஷா உதயசீலனின், அபிமானிகளான பல அனுசரணையாளர்கள் தமது விருப்பில் பல நிகழ்வுகளை நடாத்தி ஒத்துழைத்தனர்.
இதனால் செலவுகள் மீதமாகியதால் மிகுதிப் பணத்தை கில்மிஷா உதயசீலனிடம் ஏற்பாட்டுக்குழுவினர் கையளித்துள்ளனர்.
கைதடி அரச சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அந்த பணத்தில் வாங்கி கில்மிஷா நேற்று (02) கையளித்தார்.