Sunday, August 24, 2025
30 C
Colombo
வடக்குவவுனியாவில் ஒருவர் மரணம்: கொவிட் தொற்றியுள்ளதாக சந்தேகம்

வவுனியாவில் ஒருவர் மரணம்: கொவிட் தொற்றியுள்ளதாக சந்தேகம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் அவரின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நியுமோனியா காய்ச்சலாக மாறி நேற்றையதினம் (02) இரவு அவர் மரணமடைந்தார்.

பதவியாவை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவருடைய உடல் மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles