கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் 10 வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இதில் நான்கு கதவுகள் இரண்டு அடிகள் அளவுக்கும், ஏனைய ஆறு கதவுகளும் ஒரு அடி அளவுக்கும் திறக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் தற்போதைய மொத்த நீரின் கொள்ளளவு 114,000 ஏக்கர் அடியாகும்.
இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 114,000 ஏக்கர் அடியாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, மேலதிக நீரை வெளி யேற்றுவதற்காக ஏற்கனவே ஒரு அடிக்கு ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன .
இதனால் 2500 கன அடி அளவு நீர் வெளியேறி வருவதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.



