Wednesday, April 30, 2025
29 C
Colombo
ஏனையவைநுளம்புக்கு புகை போட்ட முதியவருக்கு நேர்ந்த கதி

நுளம்புக்கு புகை போட்ட முதியவருக்கு நேர்ந்த கதி

நுளம்புக்கு புகைப்போட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கே.கே.எஸ் பிரதான வீதிஇ மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி குறித்த முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி நுளம்புக்கு புகைப்போட்டுள்ளார்.

அதன்போது அவரது உடையில் தீப்பற்றிய நிலையில் அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles