வவுனியா நகரப்பகுதியில் உள்ள ஆபத்தான மரங்கள் நேற்று வெட்டி அகற்றப்பட்டன.
அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், காமினி மகா வித்தியாலம், பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரங்களே இவ்வாறு அகற்றப்பட்டன.
குறித்த மரங்கள் மிகவும் பழமையானதாக காணப்படுவதுடன், அதன் கிளைகள் அண்மையில் வீசிய காற்றின் போது முறிந்து விழுந்திருத்தது.
இதனையடுத்து இம்மரங்களை அகற்றுமாறு பல்வேறு தரப்புக்களால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பாதுகாப்பு கருத்தி குறித்த மரங்களின் ஆபத்தான கிளைகள் மரக்கூட்டுத்தாபனத்தில் நேற்று வெட்டி அகற்றப்பட்டன.