Tuesday, September 17, 2024
29 C
Colombo
கிழக்குமத்ரஸா மாணவன் மரணம்: மௌலவி மீண்டும் விளக்கமறியலில்

மத்ரஸா மாணவன் மரணம்: மௌலவி மீண்டும் விளக்கமறியலில்

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 திகதி வரை வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (21) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

பொலிஸாரின் நீண்ட சமர்ப்பணங்கள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (5) மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டடார்.

Keep exploring...

Related Articles