Friday, September 20, 2024
29 C
Colombo
ஏனையவைஇந்திய மீனவர்கள் 8 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 8 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவு பிறப்பித்தது.

கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

கைதான 8 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த மீனவர்கள் நேற்று (20) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான்,நிபந்தனையின் கீழ் அவர்களை விடுதலை செய்தார்.

இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles