யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றைய தினம் அவர் கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 6 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.-