Saturday, September 21, 2024
28 C
Colombo
வடக்கு800 ரூபா கடனால் பறிபோன உயிர்

800 ரூபா கடனால் பறிபோன உயிர்

கடனாக வாங்கிய 800 ரூபா பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த இளைஞனிடம் 800 ரூபா பணத்தினை கடனாக பெற்றுக் கொண்டுள்ளார்.

அந்த பணத்தினை அவர் திருப்பி வழங்காததால், கடந்த 10ஆம் திகதி கடன் கொடுத்த இளைஞன்,கடன் வாங்கியவருடன் முரண்பட்டு, அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

தாக்குதலின் பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து சென்று வீட்டாரிடம் ஒப்படைத்து விட்டு, இளைஞன் சென்றுள்ளார்.

மறுநாள் தாக்குதலுக்கு இலக்கானவரின் உடல்நிலை மோசமான நிலையில், வீட்டார் அவரை யாழ்இபோதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தாக்குதலாளியான இளைஞன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

சரணடைந்த இளைஞனை கைது செய்துள்ள பொலிஸார் அவரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles