Friday, September 20, 2024
31 C
Colombo
மலையகம்ஹெரோயினுடன் இருவர் கைது

ஹெரோயினுடன் இருவர் கைது

பண்டாரவளை தர்மபால கல்லூரிக்கு அருகில் 728 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று (13) இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

அதற்கமைய, கபில்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடம் 432 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மற்றைய சந்தேக நபரான பண்டாரவளை -பிதுனுவெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரிடம் 296 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்தபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்துக்கு இடமான பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை பண்டாரவளை தலைமையக பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles