Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
வடக்குகடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று பிற்பகல் 21 கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் பிடிபட்ட கடலாமைகள் இரண்டினை தென்மராட்சி – நாவற்குழிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கிய போதே சாவகச்சேரிப் பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இதன்போது கைதான சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles