கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிக்குளம் யு35 பிரதான வீதியில் கடந்த 29ம் திகதி பாரிய மரம் ஒன்று வர்த்தக நிலையமொன்றின் மீது சாய்ந்தது.
இதன் காரணமாக வர்த்தக நிலையத்தின் சுவர் பகுதி மற்றும் கூரையும் பாதிக்கப்பட்டதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.
குறித்த மரம் 50 வருடங்கள் பழமையானது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கிளிநொச்சி அரசமரக் கூட்டுத்தாபனத்தினர் அப்பகுதியில் இருந்து மரத்தை அகற்றி உள்ளனர்.



