2,500 போதை மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை வாழைச்சேனை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பிரண்டரச்சேனை பகுதியில் நேற்று (29) அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
அங்கு காரொன்றில் 2,500 போதை மாத்திரைகளுடன் பயணித்த மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.