Saturday, April 5, 2025
30 C
Colombo
கிழக்குஅம்பாறையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

அம்பாறை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (29) மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன – வெளிக் கண்டம் – ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் குறித்த சடலம் காணப்பட்டது.

வயலுக்கு பணிக்காக சென்ற குறித்த நபர் கடந்த 03 நாட்களாக வீடு திரும்பவில்லை என உறவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேற்குறித்த வயல் பிரதேசத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தபால் வீதி குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை சேர்ந்த செல்வநாயகம் சதீஸ்கரன் (40 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles