Wednesday, June 11, 2025
27.8 C
Colombo
வடக்குயாழில் காணி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவற்குழி பகுதியில் உள்ள காணி ஒன்றினை வெளிப்படுத்தல் உறுதி மூலம் பெயர் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றத்திலையே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உள்ளிட்ட சிலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அண்மையில் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்த வேளைஇ தனது காணிக்கு சென்ற போது, காணி அபகரிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

அதனை அடுத்து யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் இரு பெண்கையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles