Friday, September 20, 2024
31 C
Colombo
வடக்குவவுனியாவில் 7 வர்த்தக நிலையங்களில் திருட்டு

வவுனியாவில் 7 வர்த்தக நிலையங்களில் திருட்டு

வவுனியா – கண்டி வீதியில் அமைந்துள்ள 7 வர்த்தக நிலையங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றய தினம் இரவு இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையங்களின் கதவுகளை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சீசீடீவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் 50,000 ரூபா வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles