Monday, January 19, 2026
27.8 C
Colombo
வடக்குயாழில் 3 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழில் 3 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

அவற்றின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles