Monday, March 17, 2025
25 C
Colombo
வடக்குயாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்துக்கு அபராதம் விதிப்பு

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்துக்கு அபராதம் விதிப்பு

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றிற்கு எதிராக கடந்த 5 வருட காலமாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.

அதற்கமைய, நேற்றைய விசாரணையில் உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமையை உறுதி செய்த நீதிமன்றம், உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்துள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இயங்கி வரும் சைவ உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியதாக கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது உரிமையாளர் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்ததை அடுத்து, மன்றில் வழக்கு விசாரணைகள் தொடர்ந்தன.

கடந்த 5 வருட காலமாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமையை மன்று உறுதி செய்ததை அடுத்து உணவாக உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபா அபாராதம் விதித்து தீர்ப்பளித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles