Monday, June 9, 2025
28.9 C
Colombo
வடக்குகொள்ளையிட வந்தவரின் முகமூடியை கழற்றிய பெண் மீது தாக்குதல்

கொள்ளையிட வந்தவரின் முகமூடியை கழற்றிய பெண் மீது தாக்குதல்

யாழில் முகமூடி கொள்ளையர்களின் முகமூடியை கழட்டிய பெண்ணை கொடூரமாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.

தெல்லிப்பளை – கட்டுவான் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் பெண்ணொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில், நேற்றைய தினம் இரவு கடும் மழை பெய்த வேளை, முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை அச்சுறுத்தி கொள்ளையிட முயன்றுள்ளனர்.

அதன் போது அப்பெண் கொள்ளையர்களை எதிர்த்துள்ளதுடன், அதில் ஒரு கொள்ளையனின் முகமூடியை கழட்டியுள்ளார்.
தாக்கி விடடு, அப்பெண்ணை கீழே தள்ளி விட்டு கொள்ளையர்கள் தமது கொள்ளை முயற்சியை கை விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து பிள்ளைகள் அயலவர்களுக்கு தகவல் தெரிவித்து, அயலவர்கள் உதவியுடன் கழுத்தில் காயமேற்பட்ட பெண் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles