சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம், மோசமான வானிலை காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கியுள்ளது.
நேற்றைய தினம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே இவ்வாறு மீள சென்றுள்ளது.
குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.