2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல்ஆரம்பமாகவுள்ளது.
நேற்றைய தினம், நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.
இந்தநிலையில், பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
வாரத்தில் ஞாயிறு தவிர்ந்து மீதமுள்ள ஏனைய நாட்களில் விவாதம் இடம்பெறவுள்ளது.