மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியில் சென்ற மாணவர்களை குளவி தாக்கியுள்ளது.
இன்று (08) காலை 7 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிஞ்சாமுனை பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள பனைமரத்தில் உள்ள குளவிகள் மாணவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளன.
குறித்த மரங்களில் இருந்து கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்னர்.