தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (08) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
தேர்தல் முறைமை திருத்தம், சட்டங்கள் இயற்றுதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் முதலாவது தேசியத் தேர்தலில் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் புதிய முறைமை தொடர்பான வரைவை ஆறு மாத காலப்பகுதிக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.