Friday, September 20, 2024
28 C
Colombo
வடக்குகரையொதுங்கிய கஞ்சா பொதிகள் - விசாரணை ஆரம்பம்

கரையொதுங்கிய கஞ்சா பொதிகள் – விசாரணை ஆரம்பம்

புதுமாத்தளன் கடற்கரையில் கஞ்சா பொதிகளை கைப்பற்றிய முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் பொதிகள் காணப்படுவதாக இன்று (07) காலை 6.30 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடற்கரைக்கு சென்ற இராணுவத்தினர் கஞ்சா பொதிகளை மீட்டனர்.

இது தொடர்பாக இராணுவத்தினரால் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியிருந்த சுமார் 22 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளை கைப்பற்றினர்.

இதுவரை 11 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்ட நிலையில் கடற்கரை பகுதி முழுவதும் மேலும் பார்சல் ஒதுங்கியுள்ளதா என சோதனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Keep exploring...

Related Articles