Friday, October 10, 2025
25 C
Colombo
வடக்குஎரிவாயு சிலிண்டர்களை திருடிய இருவர் கைது

எரிவாயு சிலிண்டர்களை திருடிய இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில் எரிவாயு சிலிண்டர்கள் திருடிய இருவர், யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10ற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் போதைப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காகவே எரிவாயு சிலிண்டர் திருடியதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியில் சேந்தவர்கள் என கூறப்படுகிறது.

விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றத்தின் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles