Saturday, March 28, 2026
28.4 C
Colombo
வடக்குதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றிவளைப்பில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் இணைந்து, யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியிலுள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட 140 கிலோ எடையுள்ள வலையுடன், கடையின் உரிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்புடைய மேலதிக விசாரணை களை கடற்றொழில் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles