ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் இன்று (23) சில மாற்றங்களை செய்தார்.
மூன்று அமைச்சரவை பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று (23) காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மனம் வருந்துவதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேஅவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் தீர்மானம் அவர் எடுத்த தவறான முடிவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.