Friday, September 20, 2024
29 C
Colombo
வடக்குகிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி முன்னெடுப்பு (Photos)

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி முன்னெடுப்பு (Photos)

தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று (20) அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த அகழ்வு பணியின்போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிசார், சிறப்பு அதிரடிபடையினர் முன்னிலையில் இருந்தனர்.

இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் பொது எந்தவித்தடையங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியான பணி எதிர்வரும் நாளை (22) 9.00 மணியலவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles