Tuesday, January 13, 2026
23.9 C
Colombo
வடக்குயாழில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

யாழில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – ஸ்டாலி மாவத்தையில் நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 65 வயதுடைய பெண் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் சுமார் 05 அடி 05 அங்குல உயரமும், மெலிந்த உடலும் கொண்டவர். இறக்கும் போது அவர் நீல நிற மேலாடையுடன் பழுப்பு நிற சேலை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles