Sunday, August 10, 2025
30.6 C
Colombo
அரசியல்விரைவில் தேர்தல் நடத்தப்படுமாம்

விரைவில் தேர்தல் நடத்தப்படுமாம்

விரைவில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியதாக அவர் மேலும் கூறினார்.

விரைவில் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்த போதிலும் அது ஜனாதிபதித் தேர்தலோ, பொதுத் தேர்தலோ அல்லது ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலோ என ஜனாதிபதி எந்த ஒரு குறிப்பையும் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles