Sunday, August 10, 2025
30.6 C
Colombo
ஏனையவைஇலங்கைக்கு வரும் சீனப்பிரஜைகளுக்கான அறிவிப்பு

இலங்கைக்கு வரும் சீனப்பிரஜைகளுக்கான அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் சீன பிரஜை ஒருவர் இரண்டு கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சீன தூதரகம், வர்த்தகம், தொழில், கல்வி மற்றும் சுற்றுலா போன்றவற்றிற்காக இலங்கைக்கு வரும் அனைத்து சீன பிரஜைகளும் ‘இலங்கையின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சீனப் பிரஜைகள் இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் மத மற்றும் கலாசார பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும் என்றும் தூதரகம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

இரண்டு கடவுச்சீட்களுடன் இலங்கை வந்த சீனர் தொடர்பில், அண்மையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து உரிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles