உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான எந்தவொரு விவாதத்திற்கும் வருமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அல்லது விஜித ஹேரத்திற்கு அழைப்பு விடுப்பதாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் நடந்து 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் நீர்கொழும்பில் சோதனை நடத்த வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க பேசுவதாகவும், நீர்கொழும்பில் அல்ல, ஜே.வி.பியின் தேசியப்பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள இப்ராஹிம் நானாவின் வீட்டில் தான் சோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் குறித்து மக்கள் விடுதலை முன்னணி பேசுவது எரிச்சலூட்டுவதாகவும், அப்பாவி மக்களின் வலியை விற்று உண்ணும் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் நிமல் லன்சா எம்.பி. இதன்போது குறிப்பிட்டார்.