Friday, May 30, 2025
28 C
Colombo
ஏனையவைஇந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

எல்லை தாண்டி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்னர்.

நெடுந்தீவு அருகே, இரண்டு படகுகளில், கடற்றொழிலில் ஈடுபட்ட 12 கடற்றொழிலாளர்களையும், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்கள், யாழ்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த 12 பேரையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles