Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
சினிமாதாதா சாகேப் பால்கே விருது வென்றார் ரிஷப் ஷெட்டி

தாதா சாகேப் பால்கே விருது வென்றார் ரிஷப் ஷெட்டி

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த வருடம் வெளியானது.

சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து இந்த திரைப்படம் சாதனை படைத்தது.

இப்படம் தமிழ்இ தெலுங்குஇ இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளில் வெளியானதுடன், ரிஷப் ஷெட்டி கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார்.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்’ என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இந்த விழா நேற்று (20) மும்பையில் நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles