Sunday, June 15, 2025
25.6 C
Colombo
அரசியல்திசைக்காட்டியில் இருப்போர் திருடர்கள் - மஹிந்தானந்த அளுத்கமகே

திசைக்காட்டியில் இருப்போர் திருடர்கள் – மஹிந்தானந்த அளுத்கமகே

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி மூலம் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இந்த ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பஸ்பாகே கோரளை மற்றும் நாவலப்பிட்டி நகர சபை இணைந்து கொத்தணிக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன.

இந்த நாட்டின் வாக்காளர்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் 43 உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்தனர்.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்காக எதனையும் செய்யவில்லை, அவர்கள் தமது தனிப்பட்ட விடயங்களை மாத்திரமே செய்து கொண்டனர் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாட்டில் 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் சென்று கொவிட் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது நம்பிக்கை வைக்குமாறு நாவலப்பிட்டி வாக்காளர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles