இலங்கையில் ஜனநாயகத்தின் பொற்காலம் 2015 – 2019 க்கு இடைப்பட்ட காலப்பகுதி என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.