Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்தேவையேற்படும் போது வெளிவருவேன் - மஹிந்த ராஜபக்ஷ

தேவையேற்படும் போது வெளிவருவேன் – மஹிந்த ராஜபக்ஷ

தேவைப்படும்போது வெளியே வருகிறேன். அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் இப்போது வெளியே வரத் தேவையில்லை. எப்படியும் சரியான நேரத்தில் வெளியே வருவேன். பின்னர் என்ன நடக்கிறது என பார்ப்போம் என அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உங்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சவாலாக இல்லையா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

எப்படியானாலும் ஜே.வி.பியின் பேச்சுக்களை கேட்க விரும்பும் ஒரு குழு உள்ளது. நானும் அப்போது ரோஹன விஜேவீரவைக் கேட்கச் சென்றிருந்தேன். மக்கள் அவர்களின் கதைகளைக் கேட்கச் செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாக்கு இல்லை. ஜேவிபிகாரர்களின் கதைகளை நானும் கேட்க விரும்புகிறேன். இம்முறை மட்டுமல்ல கடந்த முறையும் ஜேவிபி. ஒன்றாக இப்படி ஒரு அலை இருந்தது. எனினும்இ எத்தனை பேர் நாடாளுமன்றத்திற்கு வந்தனர். இந்த முறையும் அப்படித்தான் என மஹிந்த பதிலளித்திருந்தார்.

ஏன் இப்போது நடைமுறை அரசியலுக்கு வருவதில்லை என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது,

‘நான் இப்போது வெளியே வர வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நாம் ஒரு இளம் தலைமுறையை உருவாக்கியுள்ளோம். அவர்கள் இந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும். எப்படியிருந்தாலும், நான் சரியான நேரத்தில் வெளியே வருவேன். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என மஹிந்த கடும் தொனியில் பதிலளித்தார்.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles