ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌஸி இன்று நாடாளுமன்றில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தமது பதவியிலிருந்து விலகினார்.
அவரின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, கட்சியின் தீர்மானத்துக்கமைய, ஏ.எச்.எம். பௌஸியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.