Wednesday, May 14, 2025
28.9 C
Colombo
அரசியல்தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசு தலையிடாது!

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசு தலையிடாது!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவர்களின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம், அவர்களின் நிகழ்ச்சி நிரலை திருத்த முயற்சிக்க மாட்டோம். நாங்கள் ஒருபோதும் அத்தகைய முடிவை எட்டவில்லை, அத்தகைய எந்த விடயத்தையும் அவர்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.

சுதந்திரமான அமைப்பான தேசிய தேர்தல் ஆணையம் தனது செயற்பாடுகளை தொடர வேண்டும் என்றும், அரசின் தலையீடு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் உதவியுடன், தேர்தல்கள், தேர்தல் திகதி மற்றும் தேர்தல் செயல்முறைகளை விவரிக்கும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். இதன் மூலம், இந்த விவகாரங்களில் சுதந்திரமான தேர்தல்கள் ஆணைக்குழுவாக செயற்படும் என்றும் குறிப்பிட்டார். .

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திருத்துவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles