சமஷ்டி என்ற பெயரில் நாடு பிரிக்கப்படுமாயின், பௌத்தத்தை பேணி பாதுகாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
யுத்தத்தில் உயிரிழந்தோரை வீடுகளுக்குள் நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் சுகாதாரம் மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்இ சிங்களவர்களுக்குள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே. அதனை பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களிடமே உள்ளது என்றார்.