அடக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குறுகிய நிகழ்ச்சி நிரல்களால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் கைச்சாத்திடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசுக்கெதிராக நாளை அமைதிப் பேரணி நடத்தப்படும் எனவும், அதனை அடக்குவதற்கு பாதுகாப்பு தரப்பினர் தயாராக இருந்தால் உடனடியாக தமது ஆயத்தங்களை மீளப் பெற வேண்டும் எனவும், அமைதிப் போராட்டத்திற்கு எவரேனும் இடையூறு விளைவித்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக அமைதிப் பயணத்தை எதிர்ப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்ஷர்களை அடக்குமுறையின் பிதா எனவும் தெரிவித்தார்.