நாமல் வழங்கிய அறிவுரையின் காரணமாகவே, கோட்டாபயவுக்கு மாத்திரமன்றி நாட்டிற்கும் இந்த அழிவு ஏற்பட்டது என சன்ன ஜயசுமன MP தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட உறுப்பினர்களின் அறிவுறுத்தலினாலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு இந்நிலை ஏற்பட்டதாக நாமல் எம்.பி தெரிவித்த கருத்துக்கு சன்ன ஜயசுமன இவ்வாறு பதிலளித்திருந்தார்.
பலம் வாய்ந்த பொதுஜன பெரமுனவில் இருந்து சிரேஷ்ட உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள் ஏன் வெளியேறுகின்றார்கள் என்பதை இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாமல் ராஜபக்ஷ புரிந்து கொள்வார்.
அதனை புரிந்து கொள்ளும் பக்குவம் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.