Saturday, May 9, 2026
25 C
Colombo
அரசியல்வேண்டுமென்றே தவறான முடிவுகளை எடுக்கவில்லை - மஹிந்த

வேண்டுமென்றே தவறான முடிவுகளை எடுக்கவில்லை – மஹிந்த

நாட்டுக்காக வேண்டுமென்றே தவறான முடிவுகளை எடுக்கவில்லை எனவும், அதனால் தம்மை யாரும் குற்றவாளிகள் என கூற முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களை சீண்டி விட்டு கேள்வி கேட்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அஞ்சாமல் முகங்கொடுக்கும் குழுவே அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும்.

அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள பொதுஜன பெரமுனவே தகுதியானது என அவர் மேலும் தெரிவித்தார்.

‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சி கூட்டம் புத்தளத்தில் இடம்பெற்றது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles