திலினி பிரியமாலியிடம் பணம் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலில் ராஜபக்ஷர்களை தவிர மற்ற அனைவரின் பெயர்களும் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் நேற்று (16) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் போராட்டம் என்ற போர்வையில் ராஜபக்ஷர்களிடம் கறுப்புப் பணம் இருப்பதாகக் கூறிய பலர் திலினி பிரியமாளியிடம் பணம் கொடுத்துள்ளனர். எங்களிடம் கருப்புப் பணம் உள்ளது என்றார்கள். ஆனால் பணம் கொடுத்தவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது எங்களைத் தவிர அனைவரும் இருக்கிறார்கள். எங்களை திருடர்கள் எனக் கூறியவர்களின் பெயர்களும் பட்டியலில் இருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.