ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், சர்வகட்சி அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு:
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்மொழிந்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை.
இந்த நிலையில் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை இனியும் ஒத்திவைக்க முடியாது.
எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளித்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
இதன் மூலம் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தீர்க்கப்பட வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமித்ததற்கு டீலோ அல்லது வழக்குகளில் இருந்து தப்பிக்கவோ காரணம் அல்ல.
நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்றும்இ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்த டலஸ் அழகப்பெருமவை விட ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசியல் அனுபவம் அதிகம், சர்வதேச சமூகத்தை கையாள்வதில் அவருக்கு இருந்த முதிர்ச்சி மிகவும் முக்கியமானது என்றார்.