ரஞ்சன் ராமநாயக்கவை தமது கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்ட உடனேயே, வெளிநாட்டு பணியார்களின் நலன் மற்றும் ஊக்குவிப்புக்கான தூதுவராக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால், நியமிக்கப்பட்டார்.
தன்னார்வ சேவையாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு அக்கட்சியிடம் இருந்து மேலும் கோரிக்கைகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.