முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்னும் இரண்டு வாரங்களில் நாடு திரும்பக்கூடும் என்று ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி, கடந்த ஜூலை மாதம் மாலைத்தீவுக்கு சென்ற அவர், சிங்கப்பூருக்கு சென்று, தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
கோட்டாபய நாளை (25) நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அவரது பாதுகாப்பு குறித்து ஆளும் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் அவரின் வருகை ஒத்திவைக்கப்பட்டது.
தனிப்பட்ட ஜெட் விமானம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கு கோட்டாபயவுக்கு இதுவரை பல நுாறு மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதிக செலவு காரணமாக அவர் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.