சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, JVP தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஆலோசிக்க தாம் முன்வைத்த யோசனைக்கு தேசிய மக்கள் சக்தியின் பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.