ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க உள்ளார்.
இந்த அரசாங்கத்தின் கீழ் வருகின்ற அமைச்சரவையில் நாமல் ராஜபக்ஷவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளது.
ராஜபக்ஷவினருக்கு எதிரான குரல் ஓங்கி உள்ள நிலையிலும் ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இந்த தீர்மானம் மஹிந்த ராஜபக்ஷவின் அழுத்தத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.